Site Logo mobile
Search Icon
Mobile Gif
Business

பட்டைய கிளப்பும் பல்வேறு திட்டம்… மாதம் ரூபாய் 10 ஆயிரம் வரை ஓய்வூதியம் மத்திய அரசு அதிரடி!!

மத்திய அரசு தனது குடிமக்களின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக அவ்வப்போது பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. நாட்டின் மூத்த குடிமக்களின் நிதிப்பாதுகாப்பிற்காக அரசாங்கம் பல ஓய்வூதியத் திட்டங்களை வழங்குகிறது. ஓய்வுபெற்ற மூத்த குடிமக்களும் இந்தத் திட்டத்தின் பலனைப் பெறுகிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் மத்திய அரசின் சில சிறப்பு ஓய்வூதியத் திட்டங்களைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

அடல் பென்ஷன் யோஜனா : இந்திய அரசு அனைத்து இந்தியர்களின், குறிப்பாக ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் நிதிப்பாதுகாப்பிற்காக 2015ம் ஆண்டில் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ், 18 வயது முதல் 40 வயது வரை உள்ள எவரும் தனது பணத்தை டெபாசிட் செய்யலாம். 60 ஆண்டுகள் நிறைவடைந்தால், ஓய்வூதியமாக 1,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை மக்களுக்கு வழங்கப்படுகிறது.

தேசிய ஓய்வூதிய அமைப்பு : தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், எந்தவொரு இந்திய குடிமகனும் 18 வயது முதல் 70 வயது வரை பணத்தை டெபாசிட் செய்யலாம். 60 வயது நிறைவடைந்தவுடன், அந்த நபருக்கு மொத்த தொகை ரொக்கம் மற்றும் மாதாந்திர ஓய்வூதியமாக கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ், 10,000 ரூபாய் வரை மாத ஓய்வூதியம் பெறும் வசதி உள்ளது.

தேசிய சமூக உதவித் திட்டம் : மத்திய அரசின் தேசிய சமூக உதவியாளர் திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூபாய் 200 முதல் ரூபாய் 500 வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. இது தவிர, இத்திட்டத்தின் கீழ் ஒருவர் இறந்தால், குடும்பத்திற்கு ரூபாய் 20,000 ஒரு முறை உதவியாக வழங்கப்படுகிறது.

இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் : மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ், 7 வயது முதல் 79 வயது வரையிலான பிபிஎல் பிரிவைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 200 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 80 ஆண்டுகள் நிறைவடையும் போது, ​​ஓய்வூதியம் மாதம் ரூபாய் 500 ஆக அதிகரிக்கப்படுகிறது.

மூத்த ஓய்வூதியக் காப்பீட்டுத் திட்டம் : வரிஷ்தா பென்ஷன் பீமா யோஜனா என்பது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தால் (LIC) இயக்கப்படும் வயதான இந்தியக் குடிமக்களுக்கான மத்திய உத்தரவாத ஓய்வூதியத் திட்டமாகும். அரசாங்கத்தின் திட்டப்படி, VPBY திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு மொத்த தொகை வைப்புத்தொகைக்கு ஆண்டுக்கு 9 சதவிகித உத்தரவாதத்துடன் வழங்கும். மேற்கண்ட திட்டங்களைப்பற்றி தெரிந்து கொண்டு உங்கள் வசதிக்கு ஏற்ப சேர்ந்து பயனடையுங்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *