Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை ஜோர் – காந்தி மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்.

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் ஆயுத பூஜைக்கான பூஜை பொருட்கள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. அனைத்து பூஜை பொருட்களின் விலையும் உயர்ந்த நிலையில் ஆர்வமாக வந்து பூஜை பொருட்களை பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.

ஆயுத பூஜையை முன்னிட்டு திருச்சி காந்தி மார்க்கெட்டில் கடலை வெல்லம், வாழை கன்றுகள், அலங்காரப் பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. வாழைத்தாரின் விலை 500 முதல் 700 வரையிலும் கரும்பு துண்டு 10-க்கும் கதம்பம் மூலம் 20 முதல் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்கள் முன் வரை விலை குறைந்து காணப்பட்ட சம்பங்கி ரோஜா மல்லிகை முல்லை உள்ளிட்ட பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. பூமாலை வகைகளில் ரூபாய் 100 முதல் 500 வரையிலும், பிரம்மாண்ட கடைகளுக்கான நிலை கதவுகளை அணிவிக்கும் மாலை ரூபாய் 1000 முதல் 2000 வரையிலும் விற்கப்பட்டு வருகிறது.

மேலும் பொரி, அவுள் பொட்டுக்கடலை, நாட்டுச்சக்கரை, தோரணம், பூசணிக்காய், பழங்கள் போன்றவற்றையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதனால் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் ஆயுத பூஜை விற்பனை களைகட்டி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *