Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் கொள்ளையடித்த வழக்கில் போலீஸ்காரர் மகன் மற்றும் கொலை குற்றவாளி உட்பட மூன்று பேர் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் ( 53 ). இவர் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர். தற்பொழுது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பாதுகாவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவியும், ஹேமப்பிரியா, லட்சுமி பிரியா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்த நிலையில் குடும்பத்துடன் கடந்த மாதம் 24ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற உறவினர் திருமண விழாவிற்காக சென்றுள்ளனர். 25ஆம் தேதி இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டதோடு வீட்டின் கதவையும் மர்ம நபர்கள் நெம்பி உடைத்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் உள்ளே சென்று பார்த்த பொழுது வீட்டின் பீரோவில் இருந்த தோடு போன்ற சிறிய நகைகள் சுமார் மூனரைப்பவுன் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் செந்தில்குமார் நவல்பட்டு காவல்நிலையில் புகார் செய்தார். பின்னர் நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி மலை பெரியார் திடலை சேர்ந்த ஐநஸ் (எ) ரமேஷ் ( 25 ), திருவெறும்பூர் அருகே உள்ள கும்பக்குடி வேலாயுதம் குடியை சேர்ந்தவர் குமார் இவர் பொன்மலை காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் வசந்தகுமார் (24). இவன் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ரவுடி வழக்கு உள்ளது. காட்டூர் கைலாஷ் நகர் சீனிவாச நகரை சேர்ந்த ராஜதுரை (24). இவன் மீது கொலை வழக்குகள் உள்ளது. 

இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் தான் செந்தில்குமார் வீட்டில் திருடியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *