Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் குடியரசுத்தலைவர் – மாநகர காவல் ஆணையர் ஆய்வு.

இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மூ வருகிற 30-ஆம் தேதி திருச்சி வருகிறார். இங்கிருந்து திருவாரூர் பல்கலைக்கழகம் சென்று பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பின்னர் ஸ்ரீரங்கம் யாத்திரிகர் நிவாஸ் பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கி ஸ்ரீரங்கம் கோவில் சென்று சுவாமி தரிசனம் செய்ய உள்ளார்.

இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, துணை ஆணையர் விவேகானந்தன், செல்வகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தார்கள். பின்னர் ஸ்ரீரங்கம் கோவில், விமான நிலையத்திற்க்கு சென்று ஆய்வில் ஈடுபட்டார்கள்.

இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மூ கோயம்புத்தூர் சூலூர்லிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகிறார். பின்னர் இங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் சென்று மீண்டும் ஸ்ரீரங்கம் ஹெலிபேடு தளத்தில் வந்து இறங்குகிறார். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு குடியரசுத்தலைவர் முர்மு முதல் முறையாக வருகை தருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *