Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் 10 லட்சம் மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலிலுக்குச் சொந்தமான திம்மராயசமுத்திரம் கிராமம் வார்டு எண்.2 பிளாக் எண்.45 சர்வே எண் 2069 கதவு எண் 5 ல் கண்டுள்ள 364 சதுர அடி கட்டிடத்தை (குடியிருப்பு)

திருச்சி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திருவரங்கம் O.S.No1688/2008 E.P.No11/2019 நாள் (05.08.2024)ந் தேதிய உத்தரவின் படி (28.08.2024) அன்று வழக்கு மன்ற அமீனா திம்மராயசமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர், திருக்கோயில் உதவி ஆணையர்/செயல் அலுவலர் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் 

காவல்துறை பாதுகாப்புடன் மேற்படி கட்டிட குடியிருப்பு திருக்கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டது. மேற்படி இடத்தின் மதிப்பு சுமார் ரூ.10,00,000/-ஆகும் என்ற விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *