Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

இறந்தவர் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் தொட்டியம் பழைய சேலம் சாலை பகுதியை சேர்ந்த மகாமுனி மகன் சுப்பிரமணியன் (50) இவர் திருச்சி – சேலம் சாலையில் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் இவர் மீது மோதி பலத்த காயமடைந்தவர்.

அவ்வழியாக சென்றவர்கள் சுப்பிரமணியன்னை மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக பாலசுப்பிரமணியன் மகன் சுந்தர் அளித்த புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் வழக்குப்பதிந்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்த பாலசுப்ரமணியன் சடலத்தை பெற்று கொண்ட உறவினர்கள் விபத்து ஏற்படுத்திய இரு சக்கர வாகனத்தை கண்டுபிடிக்க கோரி திருச்சி – சேலம் சாலையில் சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தகவலறிந்த தொட்டியம் போலீசார் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சடலத்துடன் சாலை மறியல் ஈடுபட்ட மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருச்சி – சேலம் சாலையில் சுமார் அரை மணி நேர போக்குவரத்து பாதிப்பு ஏற்பட் டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *