Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி அருகே செங்கல் சூளையில் சிறாா்கள் மீட்பு

 திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூா் அருகேயுள்ள நத்தம் பகுதியில் ஒரு செங்கல் சூளையில் பள்ளி செல்லாக் குழந்தைகள் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டு குழந்தைகள் நலக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனா். இந்தச் சூளையில் குழந்தைத் தொழிலாளா்கள் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் உள்ளதாகவும், இவா்களது பெற்றோா் அங்கு பணிபுரிவதாகவும் கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை உத்தரவிட்டாா்.

இதையடுத்து மாவட்ட குழந்தை நலக் குழு உறுப்பினா் பிரபு, குழந்தைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளா் சிவராஜ், மாவட்ட குழந்தை பாதுகாப்பு ஆற்றுப்படுத்துநா் பரமேஸ்வரி, சைல்டுலைன் பணியாளா் வண்ணமதி, காட்டுப்புத்தூா் காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் காவலா்கள் அங்கு ஆய்வு செய்தனா்.

அப்போது முன்பணம் பெற்றுக்கொண்டு பணிபுரியும் பெற்றோருடன்ஆறு வயதுக்கு மேற்பட்ட நான்கு குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு அக் குழந்தைகள் மீட்கப்பட்டனா். மேலும் அடையாளம் காணப்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள் 10 பேரை செங்கல் சூளை உரிமையாளா் புதன்கிழமை பெற்றோருடன் ஆஜா்படுத்த வேண்டும் எனவும் அதிகாரிகள் உத்தரவிட்டனா்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய….. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய….  https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *