Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

 அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஏஐடியுசி சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருச்சி தலைமை அலுவலகம் முன்பு ஜி கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது‌.

ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அகவிலைப்படி உயர்வு  ஓய்வூதியத்தினை மற்ற துறைகள் போல் ஓய்வூதியும் வழங்கிட வேண்டும்.

சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து அரசே ஓய்வூதியத்தை ஏற்று வழங்கிட வேண்டும்.

 போக்குவரத்து கழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கிட வேண்டும் வரவுக்கும் செலவுக்குமான  இடைவெளியை அரசே ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மண்டல  தலைவர் நேருதுரை  பொது செயலாளர் சுப்ரமணியன் மாவட்ட பொது செயலாளர் ஏஐடியுசி  சுரேஷ்  ஆகியோர் விளக்க உரையாற்றினார்கள்.

 பொருளாளர் பிஎம் கனகராஜ் நன்றி கூறினார்.
 90-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்  மற்றும் ஓய்வு பெற்றோர் கலந்து கொண்டனர்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 
#டெலிகிராம் மூலமும் அறிய….  https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *