Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

குழந்தைகளுக்கு வழங்கப்படும் அரிசி, முட்டை தரமில்லை – திருச்சி ஆட்சியரிடம் மனு!

சத்துணவில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் அரிசி மற்றும் முட்டை தரம் இல்லை என ஜனநாயக சமூகநல கூட்டமைப்பு மண்டல ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.

Advertisement

இந்த மனுவில் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் அரிசி மற்றும் முட்டைகள் தரமற்றவையாகவும், துர்நாற்றம் வீசக்கூடியதாகவும் இருக்கக்கூடிய அரிசியினை குழந்தைகளுக்கு வழங்குகிறார்கள் என்றும், முட்டை அளவு மிக சிறியதாக இருப்பதாகவும், தரமில்லாத சத்துணவை வழங்குவதால் குழந்தைகள் பாதிப்படைத்ததாகவும், சத்துணவு சாப்பிட்ட குழந்தைகள் சில நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.

மேலும் தரமற்ற அரிசி மற்றும் முட்டைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கையில் எடுத்து வந்ததால் பரபரப்பு நிலவியது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *