Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி அருகே விபத்தில் சாலை பணியாளர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே மேய்க்கல்நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (51). இவர் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் சாலை பணியாளராக தொட்டியம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று இரவு தனது இருசக்கர மோட்டார் வாகனத்தில் மேய்க்கல்நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே திருச்சி – நாமக்கல் சாலையில் சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த கார் மோதியதில்  கோவிந்தசாமி படுகாயமடைந்தார். 

பின்னர் அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி சாலை பணியாளர் கோவிந்தசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *