Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் அடுத்தடுத்து 5 வீடுகளில் கொள்ளை – அச்சத்தில் பொதுமக்கள்

திருச்சி சமயபுரம் அருகே உள்ள சாய் சிட்டி நகர் பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றிருந்தார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஒரு லட்சம் பணம் மற்றும் 2 பவுன் நகை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது அருகில் உள்ள பரமேஸ்வரி என்பவர் வீட்டின் பூட்டை உடைத்தும் 5 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் போலீசாருக்கு தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு மோப்ப நாயை வரவழைத்து ஆய்வு செய்தனர். கொள்ளை அரங்கேறிய வீட்டை மோப்பமிட்ட மோப்ப நாய் அதே தெருவில் உள்ள சாய்குமார், பழனிச்சாமி மற்றும் சுந்தரம் ஆகிய மேலும் மூன்று பேரின் வீட்டை சுற்றி சுற்றி வந்தது. போலீசார் வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தியபோது மூன்று வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு 20 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் 50 ஆயிரம் பணம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஒரே இரவில் அடுத்தடுத்து 5 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. 

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *