Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் ஓடிக் கொண்டிருந்த காரில் தீ – மூன்று பேர் தப்பி ஓட்டம்

திருச்சியில் இருந்து பொன்மலை ஜி கார்னர் அருகே ஒரு கார் சென்று கொண்டிருந்தது. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது திடீரென காரில் இருந்து புகை வந்துள்ளது. உடனடியாக காரை ஓரமாக நிறுத்தினர். சில நிமிடங்களில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

காரில் இருந்த மூன்று பேரும் அங்கிருந்து ஓடினர். தகவலறிந்த திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த காரை அமிலம் மூலம் அணைத்தனர்.

திருச்சியிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் வாகனங்கள் இந்த சாலையை கடந்து தான் செல்ல வேண்டும். ஆகவே சுமார் ஒரு மணி நேரம் இதில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் கார் முழுவதும் எரிந்து வெறும் தகரமாக காட்சியளித்தது. இது குறித்து கண்டோன்மென்ட் போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் எப்படி தீ பிடித்தது தொடர்பாகவும் அந்த காரில் இருந்த மூவர் தப்பியோடியது குறித்தும் காவல்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய… https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *