Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாநகர காவல்துறையினர் குடும்பங்களுக்கு கல்வி உதவித்தொகை

திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், திருச்சி மாநகரத்தில் பணிபுரியும் காவல் ஆளிநர்களுக்கு தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து கல்வி உதவி தொகை, மகப்பேறு மருத்துவ உதவித்தொகை மற்றும் ஈமச்சடங்கு தொகையை வழங்கி உரிய அறிவுரைகள் வழங்கினார். 

அதன்படி திருச்சி மாநகரத்தில் பணிபுரிந்து வரும் காவல் ஆளிநர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகையாக ரூ.1,40,000, மகப்பேறு மருத்துவ உதவி செலவிற்காக 21 காவல் ஆளிநர்களுக்கு தலா ரூ.25,000/-வீதம் ரூ.5,25,000/-மும் மற்றும் காவல் ஆளிநர்களின் குடும்ப உறுப்பினர்களின் இறப்பிற்கு ஈமச்சடங்கு

செலவுவிற்காக 12 காவல் ஆளிநர்களின் குடும்பங்களுக்கு உதவி தொகையாக ரூ.10,000/- வீதம் ரூ.1,20,000/-மும் ஆக மொத்தம் ரூ.7,85,000/ நிதியை தமிழ்நாடு காவலர் சேமநலநிதியிலிருந்து பெற்று, திருச்சி மாநகர காவல் ஆணையர் .G.கார்த்திகேயன், வழங்கினார்கள்.

மேலும் கல்வி உதவி தொகை பெறுபவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வாழ்த்துக்களை தெரித்தார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய… https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *