Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மணப்பாறையில் கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை சின்னையன்தெருவைச் சேர்ந்தவர் பட்டன். பாத்திரக்கடை நடத்திவரும் இவரது மகன் ராகுல் (வயது 16). மணப்பாறையில் உள்ள தனியார் பள்ளியில் 11 ம் வகுப்பு பயின்று வருகிறார். இன்று மாலை காட்டு முனியப்பன் கோவில் அருகே உள்ள தனியார் பஞ்சாலைக்குச் சொந்தமான கிணற்றில் நண்பர்கள் மூன்று பேருடன் குளிக்கச் சென்றுள்ளார். நண்பர்களுடன் சுமார் 60 அடி ஆழக் கிணற்றில் 20 அடிக்கு நீர் இருந்த நிலையில் தண்ணீரில் இறங்கிய ராகுல் திடீரென நீரில் மூழ்கினார். இதனையடுத்து செய்வதறியாது தவித்து நின்ற நண்பர்கள் வெளியே ஓடி வந்து அங்கிருந்தவர்களிடம் கூறியுள்ளனர். பின்னர் மணப்பாறை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் ஒன்றரை மணிநேரம் போராடி நீரில் மூழ்கிய ராகுலின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் குளிக்கச் பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *