03.01.2026 சனிக்கிழமை இன்று, திருச்சி தெற்கு மாவட்ட எல்லையான மணிகண்டம் ஒன்றியப் பகுதி பஞ்சப்பூர் கன்வென்சன் சென்டர் அருகில் உள்ள செங்குறிச்சி பிரிவு சாலை சந்திப்பில் காலை 7:00 மணிக்கு நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு வரவேற்பு கொடுத்தனர்.
இந்த முதல் இடத்தில் சிவனடியார்கள் திருமுறைகள் பாடி, பூரண கும்ப மரியாதையுடன், நாகசுர வாத்திய இசையுடனும், சைவ நெறிப்படியும் வரவேற்பு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாகமங்கலத்தில் காலை 11:30 மணிக்கு இஸ்லாமிய சான்றோர்கள் பங்கேற்று திருக்குர் ஆன் ஓதி வரவேற்றனர்.
தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு பாத்திமாநகர் தேவாலயம் முன்பு கிறித்தவ நெறிப்படி, பங்குத் தந்தை தலைமையில் விவிலியம் படித்து , தோத்திரம் சொல்லி அப்பகுதி மக்கள் சிறப்பாக வரவேற்றனர்.
இதற்காக மூன்று சமயக் கோயில்களின் படம் வைக்கப்பட்டுள்ள பிரத்யோகமான மேடை அமைக்கப்பட்டுள்ளது.
சமத்துவ நடைபயணம் என்பதால் சமய நல்லிணக்கம் மலர்ந்திட இதுபோன்ற சிறப்பான வரவேற்பை அளித்திட முன்வந்ததாக திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த நடைபயணத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, கழகப் பொருளாளர் மு.செந்திலதிபன், துணைப் பொதுச்செயலாளர்கள் டாக்டர் ரொஹயா, தி.மு.இராசேந்திரன், ஆடுதுறை இரா.முருகன், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம்,
திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி இரா.சோமு, மணிகண்டம் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆரோக்கிய ரெக்ஸ் தனராஜ், மணிகண்டம் வடக்கு ஒன்றியச் செயலாளர் க.அண்ணாத்துரை, மாவட்ட அவைத்தலைவர் எம்.ஆர்.பாலுசாமி, மாவட்ட துணைச் செயலாளர் ராஜன் பன்னீர்செல்வம் மற்றும் திரளானோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments