Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் ரெயில்வே தொழிலாளர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு

கடந்த 2004க்கு முந்தைய நிலைப்படி கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியத்துடன் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சப்படி, ஓய்வூதியத்தில் 40 சதவீதம் கம்யூனிட்டேஷன் வழங்க வேண்டும்,

ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு பிறகும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர். எம்.யு. தொழிற்சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடத்த எஸ்.ஆர்.எம்.யு., ஐ.ஆர்.எப். ஆகிய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

இந்த 3 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கெடுக்கும் தொழிலாளர்களிடம் இன்று முதல் 3 நாட்கள் தெற்கு ரெயில்வே முழுவதும் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்க வெளியிட்டுள்ள துண்டு பிரசுரத்தில் தங்களது பெயர் பணி விவரங்களை எழுதி அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் தொழிலாளர்கள் போட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *