Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் சாலையின் சகதியில் நாற்று நடும் போராட்டம்!!

திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

Advertisement

குறிப்பாக திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் குண்டும் குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கியும், சேறும் சகதியுமாக மாறி உள்ளது. 

இந்நிலையில் திருச்சி கீழே தேவதானம் 8 வது வார்டு பகுதி ரயில்வே கேட் அருகில் அப்பகுதி பொதுமக்கள் தேங்கியுள்ள மழைநீர் சகதியில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டதோடு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். 

Advertisement

தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை ஒட்டி பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *