Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

லாரியில் அடைத்து கொண்டு வரப்பட்ட மாடுகள் பறிமுதல் – நள்ளிரவில் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டச்சத்திரம் அருகே அனுப்பபட்டி பகுதியைச் சேர்ந்த திருமலைசாமி மகன் தண்டபாணி (60). இவர் லாரி ஓட்டுனராக இருந்து வருகிறார். இந்நிலையில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு 50 மேற்பட்ட மாடுகளை கன்டெய்னர் லாரியில் ஏற்றி வருவதாக அகில பாரத இந்து மகா சபா கட்சியினர் சமயபுரம் போலீசாருக்கு தகவல் தெரவித்தனர்.

பின்னர் திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடியில் ஆந்திர மாநிலம் பதிவேடு கொண்ட லாரியை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அளவுக்கு அதிகமாக கண்டெய்னர் லாரியில் இருந்த மாடுகளை பறிமுதல் செய்த சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *