Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தொடர் கொள்ளை சம்பவம் – கொள்ளையர்களை தப்ப விட்டதாக காவல்துறையினர் மீது பொதுமக்கள் குற்றசாட்டு

திருச்சி பீமநகர் கூனி பஜார் பகுதியில் ஒரு வாரத்தில் தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் எண்ணை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். அந்நிறுவனத்தின் பின்பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது.

அங்கே வீடுகளை இடிக்கும் மண் மற்றும் குப்பைகளை கொட்டுவதால் அப்பகுதி மேடாக காட்சியளிக்கிறது. கொள்ளையர்கள் அவ்வழியாக ஏறி ஓட்டைப் பிரித்து பின்பக்கம் கதவை உடைத்து உள்ளே இருந்த எண்ணெய் தயாரிக்கும் பல லட்சம் மதிப்பிலான இயந்திரம் மற்றும் அதன் உதிரி பாகங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த கொள்ளை தொடர்பாக கணேசன் மற்றும் அவர் நண்பர்கள் கொள்ளையர்களை பிடித்து பாலக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கொள்ளையர்கள் தப்பி விட்டதாக காவல் துறையினர் மீது பொதுமக்களுக்கு பெரும் அதிருப்தி  ஏற்பட்டுள்ளது. இந்த தொடர் கொள்ளை சம்பவத்தால் பாலக்கரை கூனி பஜார், பீமநகர் பொது மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *