இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவம் வகையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் இன்று (17.11.2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 01.01.2026 ஐத் தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு தகுதியுள்ள நபர்கள் எவரும் வாக்காளர் பட்டியலில் விடுபடவில்லை என்பதையும். தகுதியற்ற நபர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்யும் பொருட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 04.11.2025 அன்று முதல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேற்கண்ட சிறப்பு தீவிர திருத்த பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு முன்நிரப்பப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கி பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்பட்டு வாக்குசாவடி அலுவலர் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணியில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில், பொதுமக்களுக்கு சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த தொடர்பான விழிப்புணர்வு பேரணி பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு பேரணியானது பிஷப் ஹீப்பர் கல்லூரியில் தொடங்கி அரசு மருத்துவமனை, நீதிமன்றம் வழியாக மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இப்பேரணியில் வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பாக கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், அவர்கள், உதவி ஆணையர்கள் திரு.சென்னு கிருஷ்ணன், திரு.சண்முகம் மற்றும் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments