Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

சிவன் சொத்து குலநாசம் – திருச்சியில் ஒட்டப்பட்டடுள்ள போஸ்டரால் பரபரப்பு

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்சி திருப்பட்டூர் பிரம்மா கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவிலில் உள்ள பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த கோவிலில் அறநிலை துறை தொல்லியல் துறை அதிகாரிகள் பல்வேறு முறைகேடு நடைபெற்றதாக கோவில் நிர்வாகத்தை கண்டித்து திருப்பட்டூர் கிராம வாசிகள் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சுவற்றில் போஸ்ட் ஒட்டிய மர்ம நபர் மீது திருப்பட்டூர் கோவில் நிர்வாகம் சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

மேலும் திருப்பட்டூர் கோவிலில் என்னென்ன ஊழல்கள் நடைபெற்று உள்ளது அவற்றின் மதிப்பு குறித்து விளக்கத்தோடும் ஆதாரத்தோடு அந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *