திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் கடுமையாக சிரமப்பட்டு வருகின்றனர்.
கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தூரத்தூரமாக உள்ள கிராமங்கள் மற்றும் நகர புறப்பகுதிகளிலிருந்து வந்து படித்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு தேவையான அளவில் பேருந்துகள் ஒதுக்கப்படாததால், தினமும் கல்லூரி வருகை மற்றும் வீடு திரும்புவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக, கல்லூரி நேரத்தில் அதிக நெரிசல் காணப்படுவதால் மாணவர்கள் பேருந்துகளில் ஏற முடியாமல், படிப்பில் பாதிப்பு அடைகிற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சினையை கடந்த காலங்களில் பலமுறை இந்திய மாணவர் சங்கம் எடுத்துரைத்தும், அவ்வப்போது சில கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், பின்னர் மீண்டும் பழைய நிலை தொடர்கிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் பஞ்சப்பூர் மாற்றப்பட்டதற்கு பிறகு இன்னும் சிரமம் அதிகரித்துள்ளது இதனால் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர் மன்னார்புரத்திலிருந்து தினமும் நடந்து வரக்கூடிய அவல நிலை உள்ளது
மாணவர்கள், “தினமும் கல்லூரி செல்லும் போதும், வீடு திரும்பும் போதும் மிகவும் கஷ்டப்படுகிறோம். மாணவர்களுக்கு நிரந்தரமாக போதுமான பேருந்து சேவைகள் வழங்க அரசு மற்றும் போக்குவரத்து துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுழைவாயில் முன்பு கையெழுத்து இயக்கம் மாவட்ட தலைவர் ஜி.கே.மோகன் தலைமையில் நடைபெற்றது மாவட்ட துணை தலைவர்கள் அன்பு,மாவட்ட துணை செயலாளர் ஆர்த்தி, சுதேசனா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சாலினி கிளை நிர்வாகி பூபதி,தேவா ஆகியோர் கலந்து கொண்டனர் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments