Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

லாரியில் கிடந்த எலும்புக்கூடு – திருச்சி போலீசார் விசாரணை!!

Advertisement

திருச்சி பால்பண்ணை அருகே பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியில் அடையாளம் தெரியாத எலும்புக்கூடு – காந்தி மார்கெட் போலீசார் விசாரணை.

Advertisement

திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணையில் உள்ள ஆவின் பூத் அருகே காலி மனை உள்ளது,கணபதி சர்வீஸ்க்கு சொந்தமான இந்த காலி மனையில் பழுதடைந்த லாரி ஒன்று பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது, இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த கனமழையால் லாரியில் பாதி அளவிற்கு தண்ணீர் தேங்கி இருந்தது, மூழ்கிய நிலையில் இருந்த லாரியை ஒரு வருடத்திற்கு பிறகு பழுது பார்ப்பதற்காக இன்று மதியம் ஜேசிபி எந்திரம் மூலம் லாரியை வெளியே எடுத்து பார்த்துள்ளனர்.

அப்போது டிரைவர் இருக்கையின் அருகே அடையாளம் தெரியாத ஒரு ஆணின் எலும்புக்கூடு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisement

இதனையடுத்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்,சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் எலும்பூக்கூட்டை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,மேலும் அடையாளம் தெரியாத இந்த ஆணின் எலும்புக்கூடு யாரெண்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *