Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கே.என்.நேரு நிகழ்வை புறக்கணித்த தெற்கு மாவட்ட கவுன்சிலர்கள், துணை மேயர்

தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை புறக்கணித்த தெற்கு மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் துணை மேயர்.

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில்    திருச்சி மாநகராட்சி பகுதிகளில் புதை சாக்கடை அடைப்பை நீக்கும் வகையில் ரூபாய். 3.78 கோடி மதிப்பீட்டில் புதிதாக வரப்பெற்ற சூப்பர் சக்கர ரீசைக்கிளினர் வாகனத்தை (Super Sucker Cum Jetting with Recycling Facility Vechcle) மாநகராட்சியின் பயன்பாட்டிற்கு நகராட்சி நிருவாக துறை அமைச்சர் கே.என்.நேரு, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் நகராட்சி நிருவாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், திருச்சி மாநராட்சி மேயர் மு.அன்பழகன், திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், திருச்சி நகரப் பொறியாளர் சிவபாதம், செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மகேஸ் ஆதரவாளர்கள் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த துணை மேயர் திவ்யா, கோட்டத் தலைவர் மதியழகன் அமைச்சர் மகேஸ் ஆதரவு மாமன்ற உறுப்பினர்களும் இந்நிகழ்வில் பங்கேற்காதது உட்க்கட்சியில் பூசல் என்பதை வெளிப்படுத்தி விட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *