Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பணி நேரத்தில் உயிரிழந்த போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர்

திருச்சி முத்தரசநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜாராம் (57). இவர் ஸ்ரீரங்கம் போக்குவரத்து பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். நேற்று (12.11.2023) மதியம் திருவானைக்காவல் பகுதியில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார். திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது.

 உடனே மாம்பழச்சாலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ராஜாராம் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடல் முத்தரசநல்லூர் பகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட காவல் துறை சார்பாக அவருக்கு அரசு மரியாதை செலுத்தி இறுதி சடங்குகள் நடைபெற உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *