சிறப்பு சொற்பொழிவு அறிக்கை
“பொறியியல் எதிர்காலம்: அரசு வேலை வாய்ப்புகளையும் ஸ்டார்ட்அப் வெற்றியையும் திறக்கும் வழிகள்”
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை மற்றும் Startup TN – முன் வளர்ப்பு மையம், இந்திரா கணேசன் அறக்கட்டளை இணைந்து, “பொறியியல் எதிர்காலம்: அரசு வேலை வாய்ப்புகளையும் ஸ்டார்ட்அப் வெற்றியையும் திறக்கும் வழிகள்” என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவை 26 மார்ச் 2026 அன்று இந்திரா கணேசன் நிறுவனங்களில் சிறப்பாக நடத்தியது.
நிகழ்ச்சி துவக்கத்தில், இன்க்யுபேஷன் செல்லின் அசோசியேட் T.பவித்ரா அவர்கள் வரவேற்புரை வழங்கி, நிகழ்ச்சியின் நோக்கம் மற்றும் முக்கியத்துவத்தை விளக்கி, கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பங்கேற்பாளர்களை அன்புடன் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் டாக்டர் G பாலகிருஷ்ணன், பதிவாளர் டாக்டர் M. அனுசுயா, இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் கார்த்திகேயன், இன்க்யுபேஷன் மேலாளர் டாக்டர் ஸ்ரீராம் மற்றும் சித்தா துறையைச் சேர்ந்த டாக்டர் B வரலக்ஷ்மி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினராக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் துணை கலெக்டர் (பயிற்சி) திரு. ஃபரூக் யு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் அரசு பணிகளில் உள்ள வாய்ப்புகள், போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்பு முறைகள், நேர மேலாண்மை மற்றும் விடாமுயற்சியின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு பயனுள்ள விளக்கங்களை வழங்கினார். மேலும், ஸ்டார்ட்அப் சூழலின் வளர்ச்சி, தொழில் முனைவுத்திறன் மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
அவரது உரையில் திறன் மேம்பாடு, தெளிவான இலக்குகள் அமைத்தல் மற்றும் ஒழுங்கான முயற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
அவரின் அனுபவப் பகிர்வுகள் மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்தன.
இந்த நிகழ்ச்சியில் பொறியியல், மருத்துவம், துணை மருத்துவ அறிவியல், கலை மற்றும் அறிவியல், கல்வி துறைகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த சொற்பொழிவு பல்வேறு தொழில் வாய்ப்புகள் குறித்து தெளிவான புரிதலை அளித்து, மாணவர்களை முன்னேற்றப் பாதையில் செல்ல ஊக்குவித்தது.
நிகழ்ச்சியின் நிறைவில், இன்க்யுபேஷன் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆர். பாரத் குமார் அவர்கள் நன்றியுரை வழங்கி,
நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய ஏற்பாட்டாளர்கள், கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.
நிகழ்ச்சி நன்றியுரை மூலம் சிறப்பாக நிறைவடைந்தது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments