108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் வைகுந்த ஏகாதசி பெருவிழா எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு வைகுந்த ஏகாதசி பெருவிழா கடந்த 19ஆம் தேதி தொடங்கியது.
நம்பெருமாள் 9 ஆம் நாளில், முத்துக் குறி கேட்க, முத்து திருநாரணன் கொண்டை அணிந்து முத்து அபய ஹஸ்தம், கடி அஸ்தம் சாற்றி முத்து அங்கி அணிந்து, ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம், மகரி, சந்திர ஹாரம், சுட்டி பதக்கம், 2 வட முத்து மாலை; முத்து திருவடி முத்து கர்ண பத்ரம் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து தங்கபல்லக்கில் எழுந்தருளி, உள் பிரகாரத்தில் வலம்வந்து அர்ச்சுனா மண்டபத்தில் ஆழ்வார்கள் முன்னிலையில், பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.
பின்னர் மாலை அங்கிருந்து புறப்படும் நம்பெருமாள் இரவு 9:45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
பகல்பத்து வைபவத்தின் 10ம் நாள் வரும் டிசம்பர் 29- ம் தேதி மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி அளிப்பார். அதன் பின்னர் இராப்பத்து வைபத்தின் முதல் நாளான வரும் டிசம்பர் ஜனவரி 30-ம் தேதி அதிகாலை 4:30- மணி அளவில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு பரமபதவாசல் திறப்பு எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும்.
அப்போது ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் அதிகாலை 5:45 மணிக்கு பரமபதவாசலை திறந்து கடந்து செல்வார். இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ரங்கா ரங்கா என பக்தி கோசத்துடன் சாமி தரிசனம் செய்வார்கள்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் தலைமையில் செய்து வருகின்றனர்.
வைகுந்த ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு வருகிற 30-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். வைகுண்ட ஏகாதசி திருவிழா அன்று மூவாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments