Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பழங்களை நிறம் மாற்றும் செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்

திருச்சியில் பழங்களை நிறம் மாற்றும் செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டி

திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் ஆர்சி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு நடத்தினார்கள்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் பிரதீப்குமார்…

 திருச்சியில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் 12 மணியிலிருந்து மூன்று மணி வரை அவசர தேவை இல்லாமல் யாரும் வெளியில் பயணிக்க வேண்டாம் கோடை காலங்களில் வெப்பம் அதிகமாக இருப்பதால் நீர் ஆகாரங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளுமாறு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார். 

திருச்சி மாவட்டத்தில் தர்பூசணி உள்ளிட்ட பழங்களில் நிறம் மாறுவதற்கு கலப்படம் செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது புகார் ஒன்று வந்துள்ளது.உணவு மருந்து பாதுகாப்புத்துறை அதிகாரிகளை சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டத்தில் 720 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள். மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *