Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு  வீரர்கள் தேர்வு செய்யும் போட்டி

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரியில் 16 வயதிற்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான  தேர்வு போட்டி நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர்கள் விண்ணப்பித்து அதிலிருந்து தேர்வு செய்து தற்போது 32 வீரர்கள் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்ககு தேர்வு செய்ய போட்டிகள் இன்று(27.10.2022) காலை தொடங்கியது. 

நாள் ஒன்றுக்கு 90 ஓவர் வீச வேண்டும் .மூன்று நாட்கள் இப்போட்டி நடைபெறும். இது மட்டுமில்லாமல் வருகிற. 01.11.22 03.11.22 மூன்றுநாட்கள்   சென்னையில் இரண்டாவது போட்டி  நடைபெற உள்ளது. இன்று 22 வீரர்கள் கலந்து கொள்வார்கள். அதேபோல் மீதமுள்ள வீரர்களும் இதில் நன்றாக விளையாடிய வீரர்களும் சென்னையில் நடைபெறும்.
 போட்டியில் கலந்து கொண்டு அதில் 16 கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு  அனுப்புவார்கள். வருகிறார் டிசம்பர் மாதம் இதில்  தேர்வான 16 வீரர்கள்( பதினாறு வயதிற்கு உட்பட்ட) கிரிக்கெட்  போட்டி பிசிசிஐ சார்பில் ரஞ்சி மாதிரி போட்டி நடத்த திட்டமிட்டுள்ளனர். 
தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் ஏற்கனவே விளையாடிய வீரர்கள் தேவ் ஆனந்த், சிவக்குமார், கோபிநாத், சுதீஷ், ஸ்ரீவாசுதேவதாஸ்( தமிழ்நாடு கிரிக்கெட் 16 வயதிற்குட்பட்ட அணியின் தேர்வுக்குழு தலைவர்) உள்ளிட்டவர்கள் தேர்வு செய்யும் கமிட்டியில் உள்ளனர். இவர்கள் நேரடியாக போட்டிகளைப் பார்த்து வீரர்களை தேர்வு செய்கின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *