Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

தேர்வு எழுதிய மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் போக்சோவில் கைது – திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் பகுதியில் ஹாஜியார் முகமது யூசுப் மேல்நிலைப்பள்ளி 30 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் என 500க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இந்நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு ஆங்கில பாட ஆசிரியர் முருகேசன் கடந்த பல நாட்களாகவே 12ம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பள்ளி தலைமை ஆசிரியர் ஆங்கில பாட ஆசிரியர் முருகேசனை பத்து நாட்கள் பள்ளிக்கு வரக்கூடாது என நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் பணிக்கு சேர்ந்த இவர் மீண்டும் இன்று மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததால் பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரிடம் கூறிய தகவல் அடிப்படையில் இனாம்குளத்தூர் பொது மக்கள் 100க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு பள்ளி ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த இனாம்குளத்தூர் போலீசார் பள்ளியில் ஆசிரியரிடம் விசாரணை செய்து வந்த நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் பள்ளி ஆசிரியர் முருகேசன் மற்றும் சக ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் மாணவி மற்றும் பெற்றோரிடம் விசாரணை செய்தார்.

இதனை தொடர்ந்து முருகேசனை கைது செய்து ஜீயபுரம் அனைத்து மகளிர் அழைத்து சென்றனர்.  சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆங்கில பாட ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உத்தரவிட்டார். மேலும் ஆசிரியர் முருகேசன், பள்ளி மாணவிகளிடம் விசாரணை செய்து ஆங்கில பாட ஆசிரியர் முருகேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைதானர். திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *