Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மருத்துவமனையில் வாலிபர் மரணம் – போலீசார் விசாரணை

திருச்சி குண்டூர் பர்மா காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (38). இவர் திருச்சி அருகே உள்ள மாத்தூர் தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு முதுகு வலி காரணமாக திருச்சி சீனிவாச நகர் பகுதியில் இயங்கி வரும் ஜெயரங்கா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா ஆராய்ச்சி நிலையம் என்னும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார்.

ஒரு வார காலமாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை மருத்துவமனை அறையில் தூக்கு மாட்டி இறந்த நிலையில் உள்ளார். இதனை கண்ட மருத்துவமனை நிர்வாகம் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது. அங்கு வந்த அவரது உறவினர்கள் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை அவரை கொலை செய்து விட்டனர் என கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவரது உடலானது திருச்சி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது. இதுக்குறித்து இறந்தவரின் தாய் கூறுகையில்…. எனது மகன் முதுகு வலி சிகிச்சைக்காக சென்றுள்ளான் கடந்த ஒரு வாரமாக இருந்தவர் திடீரென இறந்ததாக கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனது மகன் தற்கொலை செய்து கொள்ளவில்லை அவரை கொலை செய்து உள்ளனர் என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *