திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் மோகன் (53). இவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். மேலும் பயணிகளை ஏற்றிக் கொண்டு வெளி மாநிலங்களுக்கும் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பணிக்குச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து அவரது மனைவி லால்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாயமான மோகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




Comments