Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட ஆட்சியர் மற்றும் மேயர்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (24.06.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

இதே போன்று திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், தலைமையில் இன்று (24.06.2024) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.

மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் நகரப் பொறியாளர் பி. சிவபாதம், மண்டலத்தலைவர்கள் த.துர்காதேவி, ஜெயநிர்மலா, துணை ஆணையர்கள் நாரயணன், செல்வ பாலாஜி, உதவி ஆணையர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *