Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் திருச்சி கிழக்கு தொகுதியை கேட்பது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முடிவு

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் திருச்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் கலந்து கொண்டார்.கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது மற்ற மாணவர்களின் சம வாய்ப்பை பறிப்பது போன்றது.எனவே அனைத்து மாணவர்களுக்கும் உரிய வாய்ப்பு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவ படிப்பில் சேர்ந்து பணம் கட்ட முடியாமல் இருக்கும் மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து உதவ வேண்டும்.
உதயநிதி தேர்தல் பிரச்சாரத்தை தற்போது தொடங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. 
உதயநிதியின் தேர்தல் பிரச்சாரத்தை தடுப்படு தி.மு.க விற்கு மக்களிடையே ஆதரவை அதிகரிக்கும்.

சட்டமன்ற தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து தி.மு.க வுடன் ஆலோசித்து முடிவெடுப்போம்.தி.மு.க உடன் முஸ்லீம் லீக் கூட்டணி என்பது வெறும் தேர்தல் நேர கூட்டணி மட்டுமல்ல,அது கொள்கை அடிப்படையிலான கூட்டணி.தி.மு.க வும் எங்களை வெளியே விடமாட்டார்கள்,நாங்கள் அவர்கள் கூட்டணியிலிருந்து வெளியேற மாட்டோம்.

பீகாரில் காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்ததற்கு ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தான் காரணம் என கூறுவது ஏற்புடையதல்ல.
உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக வருகையால் எதிர்கட்சிகளுக்கு எந்த பயமுமில்லை.
தமிழகத்தில் பா.ஜ.க என்கிற கட்சி தேவையில்லை, அவர்கள் செய்ய விரும்புவதை தற்போது அ.தி.மு.க செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க விற்கு தற்போது இருக்கும் கொஞ்சம் வாக்குகளையும் அமித்ஷாவின் பேச்சை கேட்டால் அ.தி.மு.க இழக்கும் என்றார்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணியில் திருச்சி கிழக்கு தொகுதியில் ஒதுக்க வேண்டும் என தி.மு.க தலைமையிடம் கேட்பது,புதிய கல்வி கொள்கை,சி.ஏ.ஏ ஆகியவற்றை ரத்து செய்வது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *