Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கிணற்றில் தவறி விழுந்து பலியான சிறுவனின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்

திருச்சி  திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில் மில் பர்மா காலனியை சேர்ந்தவர் டிரைவர் ராஜா. இவரது மகன் ஜெகன்நாத் (10). இவர் காட்டூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5ம் வகுப்பு படித்து வந்தான். விடுமுறை தினமாக இருந்ததால் அன்றைய தினம் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது பூங்காவிற்கு அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.

இந்த செய்தியை அறிந்ததும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இல்லத்திற்குச் சென்று பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறி, சிறுவனின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாநகரக் கழக செயலாளர் மதிவாணன் மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன்  காட்டூர் பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *