கடந்த 11.06.22-ம்தேதி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோமசுந்தரம் நகர் அருகில் உள்ள சுடுகாடு அருகே ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரி ஹரிசுதன் (எ) ஹரிஹரசுதன் என்பவரை கைது செய்தும், கடந்த 25.07.22-ம்தேதி திருச்சி இரயில்வே காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஜங்சன் நடைமேடையில் நடந்து சென்றடிபன் விற்பனையாளரிடம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து, பணம் ரூ.1050/ பறித்துக்கொண்டதாக ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் எதிரி ஸ்ரீதர் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தும், எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில் எதிரி ஹரிசுதன் (எ) ஹரிஹரசுதன் மீது காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் பைனான்சியரை காரில் கடத்தி கொலை செய்த வழக்கும், எதிரி ஸ்ரீதர் மீது திருச்சி இரயில்வே காவல்நிலையத்தில் இரயில் பயணிகளிடம் செல்போன் மற்றும் பணம் பறித்த வழக்கும், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வாட்ச்மேன் மற்றும் அவரது மனைவியை கத்தியை காண்பித்து மிரட்டி நகை, பணம், மற்றும் செல்போன் பறித்த ஒரு வழக்கும், ஒருவரை பீடி கேட்டு தராததால் கட்டையால் தாக்கிய 3 வழக்குகள் உட்பட மொத்தம் 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவருகிறது.

எனவே, எதிரிகள் ஹரிசுதன் (எ) ஹரிஹரசுதன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், கொலை குற்றங்களில் ஈடுபடுவதும் விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments