Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

பூங்காவில் பட்டப்பகலில் மது அருந்திய வாலிபர்களை விரட்டி பிடித்த காவல்துறை

திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 17வது வார்டில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா ஒன்று உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நவீன முறையில் கட்டப்பட்டு இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. 

இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சமூக விரோதிகள் சிலர்  பகல் இரவு என பாராது எந்நேரமும் மது அருந்தும் கூடாரமாக பயன்படுத்தி வந்தனர். 

பூங்காவின் அனைத்து பகுதியிலும் காலி பாட்டில்கள் கிடக்கிறது. மேலும் மின்சார விளக்குகள், மின்விசிறி இருக்கைகள், கழிப்பிடம் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் திருச்சி கோட்டை காவல் நிலைய போலீசார் திடீரென அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்ட போது மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர்கள் சிலரை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *