Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தள்ளுவண்டி வியாபாரியிடம் பணத்தை பறித்த ரவுடி மற்றும் வீட்டினுள் புகுந்து பணம், பொருட்கள் திருடிய இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, உத்தரவின்பேரில், திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையிலும், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், ஆயுதங்களை காண்பித்து வழிப்பறி செய்யும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், சரசு உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்.

கடந்த (16.05.2024)-ந் தேதி, உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஞ்சவர்ணசாமிகோயில் தெருவில் தள்ளுவண்டி காய்கறி வியாபாரியிடம், ஒரு நபர் சுத்தியை காண்பித்து பணம் கேட்டதாகவும், அதற்கு மேற்படி வியாபாரி பணம் தர மறுக்கவே அவரது தள்ளுவண்டியை கீழே தள்ளிவிட்டு சேதப்படுத்தியும், சட்டை பையில் வைத்திருந்த ரூ.1000/- பணத்தை பறித்துக்கொண்டு சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னர், வழக்கு விசாரணையில், உறையூர் காமாட்சியம்மன்கோயில் தெருவை சேர்ந்த ரவுடி ராஜா (எ) மாரீஸ் ராஜா (46), த.பெ.கிருஷ்ணமூர்த்தி என்பவர் இச்செயலில் ஈடுப்பட்டது தெரிய வந்தும், எதிரியை கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் விசாரணையில் ரவுடி ராஜா (எ) மாரீஸ் ராஜா என்பவர் உறையூர் காவல் நிலைய எல்லைக்குப்பட்ட பகுதியில் மாட்டு வண்டி பந்தயத்தில் முன்விரோதத்தால் ஒருவரை கொலை செய்த வழக்கு மற்றும் ஒரு அடிதடி என இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கடந்த (06.05.2024)-ந் தேதி தில்லைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணாநகர் 6வது கிராஸில் உள்ள வாகன ஒட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வரும் ஒருவரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து பணம் மற்றும் விலை உயர்ந்த கைகடிகாரத்தை திருடியதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்தும், விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டையை சேர்ந்த வெற்றிவேல் (48), த.பெ.அண்ணாமலை என்பவரை கைது செய்து, வழக்கு சொத்துக்கள் மீட்கப்பட்டு, எதிரியை கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் விசாரணையில் வெற்றிவேல் என்பவர் மீது கண்டோன்மெண்ட், ஸ்ரீரங்கம் மற்றும் தில்லைநகர் காவல் நிலையங்களில் தலா 1 திருட்டு என 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது. எனவே, ரவுடி ராஜா (எ) மாரீஸ் ராஜா மற்றும் வெற்றிவேல் ஆகியோர்களின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்று குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *