Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

நகை ஆசாரி வீட்டில் 20 பவுன் நகை மற்றும் 200 கிராம் தங்கம் திருட்டு

திருச்சி சஞ்சீவி நகர் அப்துல் கலாம் தெருவை சேர்ந்தவர் சந்திரன் (47), நகை செய்யும் ஆசாரி தொழில் செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 20ஆம் தேதி காசிக்கு சென்று விட்டு பிறகு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இன்று வீடு திரும்பி உள்ளனர்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் புதிதாக நகை செய்ய வைத்திருந்த 200 கிராம் தங்க நகைகள் திருடு போனது தெரிய வந்தது.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் கோட்டை குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *