Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் 5 கடைகளில் திருட்டு – தேங்காய் எண்ணெய், பேஸ்ட் ,தீனிகளை திருடிய திருடர்கள் சுவாரசியம்

திருச்சி அரியமங்கலம் அருகே அம்பிகாபுரம் சாலையில் மளிகை கடை , செல்போன் கடை என சிறு சிறு கடைகள் உள்ளது. வழக்கம்போல் நேற்று கடைகளை இரவு பூட்டிவிட்டு உரிமையாளர்கள் வீட்டுக்கு சென்றுள்ளனர். காலை வந்து கடையைத் திறக்கும் பொழுது உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

5 கடைகளில் வரிசையாக பூட்டை உடைத்து திருடர்கள் தங்களது கைவரிசையை காண்பித்துள்ளனர். மளிகை கடை உரிமையாளரான கிஷோர் என்பவரது கடையில் பொருட்கள் திருடப்பட்டுள்ளது. செல்போன் கடை செல்போன் உள்ளிட்ட பொருட்கள் களவாடப்பட்டு உள்ளது.

இந்த திருட்டு சம்பவத்தில் ஒரு சுவாரஸ்யமும் அரங்கேறியுள்ளது. மளிகை கடையில் இருந்த தேங்காய் எண்ணெய், சோப்பு , பேஸ்ட் , எப்எம் ரேடியோ சிறு நொறுக்கு தீனிகளையும் திருடி உள்ளனர். பொதுவாக கடைகளில் செல்போன்கள், பணம் சில உயர்ந்த விலை  பொருட்கள் திருடு போகும்.

ஆனால் இங்கு ஐந்து கடை கைவரிசையில் மளிகை கடையில் உள்ள பொருட்கள் களவு போனது  வினோதமான திருட்டாக இச்சம்பவம் சுவராஸ்யத்துடன் பார்க்கப்படுகிறது. 5 கடை திருட்டு சம்பவத்தை அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *