Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஸ்ரீரங்கத்தில் திருக்கைத்தலசேவை – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோகவைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் கடந்த 19.12.2025ம் தேதி முதல் வைகுண்ட எகாதசி பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இராப்பத்து திருவிழாவின் முதல்நாளில் சொர்க்கவாசல் திறப்பு கடந்த 30.12.2025ம்தேதி நடைபெற்றது.

நம்மாழ்வாருக்கு காட்சியளிக்கும் பொருட்டு நம்பெருமாள் நின்றகோலத்தில் காட்சியளித்தை உணர்த்தும் வகையில், வருடத்திற்கு ஒருமுறை ஸ்ரீரங்கத்தில் மட்டுமே நடைபெறும் திருக்கைத்தல சேவை இராப்பத்து திருவிழாவின் 7ம் திருநாளான இன்று நடைபெற்றது.

நம்பெருமாள்(உற்சவர்) முத்துப் பாண்டியன் கொண்டையணிந்து, நீலநாயகம், அடுக்கு பதக்கம், காசு மாலையணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு பரமபதவாசல் வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளி மாலை 6.00மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தை அடைந்தார். இதையடுத்து நம்பெருமாள் திருக்கைத்தல சேவை மாலை 6.15மணிக்கு தொடங்கியது.

நம்மாழ்வார் பராங்குச நாயகி திருக்கோலத்தில் எழுந்தருளிய, திருமாமணி மண்டபத்தில் நம்பெருமாளை கோவில் பட்டர்கள் தங்களது இரு கைகளிலும் ஏந்தியபடி நம்மாழ்வாருக்கும், பக்தர்களுக்கு சேவை சாதிக்க செய்தனர். சுமார் 15நிமிடங்கள் நம்பெருமாளை கைகளில் ஏந்தியபடியே பக்தர்களுக்கு திருக்கைத்தல சேவை நடத்தப்பட்டது.

வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இந்த சேவை நடைபெறுகிறது என்பதால் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என பக்தி முழக்கமிட்டவாறு நம்பெருமாளை தரிசித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *