Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மாநகர சபை கூட்டம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்டத்தில் இன்று  நவம்பர் 1ல் மாநகர சபை மற்றும் கிராம சபை கூட்டம் பொன்மலை மண்டலம் 3 வார்டு எண்  46 இல் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டார் இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர்  
மாநகர செயலாளர் மண்டலம் மூன்றின் தலைவர்  மு.மதிவாணன், பொன்மலை பகுதி செயலாளர் தர்மராஜ் மாமன்ற உறுப்பினர் ரமேஷ் ஆகியோரும் மற்றும் அரசு உயர் அலுவலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகள் சம்பந்தமாகவும் தங்களது தனிப்பட்ட பிரச்சனைகள் சம்பந்தமாகவும் மனுக்களை அமைச்சர் அவர்களிடமும் மாநகராட்சி ஆணையர் அவர்களிடமும் வழங்கினர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/neplqelno

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *