Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாநகர் மாவட்ட தே.மு.தி.க புதிய நிர்வாகிகள் – விஜயகாந்த் அறிவிப்பு

திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் பட்டியலை தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார். தேமுதிக மாவட்ட அமைப்பு தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாநகர் மாவட்டத்தில் திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர் ஆகிய தொகுதிகள் அடங்கும்.

இதில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக டி.வி.கணேஷ், அவைத் தலைவராக வி.கே.ஜெயராமன், பொருளாளராக மில்டன் குமார், துணை செயலாளர்களாக ராஜ்குமார், மகாமுனி, எல்.ஐ.சி சங்கர், பிரீத்தா விஜய்ஆனந்த்,

தலைமை செயற்குழு உறுப்பினர்களாக ராமு, பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்களாக லோகராஜ், விஜய சுரேஷ், ஐயப்பன், பெருமாள், பால முருகன், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மலைக்கோட்டை பகுதி செயலாளராக என்.எஸ். எம்.மணிகண்டன், பாலக்கரை பகுதி செயலாளர் சங்கர், உறையூர் பகுதி செயலாளராக மோகன், தில்லை நகர் பகுதி செயலாளராக சாதிக்அலி, ஜங்ஷன் பகுதி செயலாளராக வெங்கடேசன், ஏர்போர்ட் பகுதி செயலாளராக குமார், பொன்மலை பகுதி செயலாளராக அருள் ராஜ், அரியமங்கலம் பகுதி செயலாளராக அலெக்ஸ்,

திருவரம்பூர் வடக்கு ஒன்றிய செயலாளராக மாரீசன், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக பரமசிவம், திருவெறும்பூர் கூத்தைப்பார் பேரூர் செயலாளராக முத்துக்குமார், துவாக்குடி நகர செயலாளராக சிங்காரவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் அவர்கள் கட்சியின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *