Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் இன்று (03.07.2022) மட்டும் சதம் அடித்த கொரோனா தொற்று

திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேசமயம் இறப்பு எண்ணிக்கை இல்லை. ஏற்கனவே 362 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டுள்ளனர்.

இன்று (03.07.2022) புதிதாக 104 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 21 பேர் குணமடைந்துள்ளனர். தற்பொழுது கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர் மொத்தம் 445 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் கொரோனா தொற்று வேகமாக பரவக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், முகக் கவசம் தனி மனித இடைவெளி கிருமி நாசினி கொண்டு கையை சுத்தப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *