Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

நாளை (20.08.2024) இரண்டாம்நிலை காவலர்கள், தீயணைப்புதுறை மற்றும் சிறைத்துறை காவலர்களுக்கான உடற்தகுதிதேர்வு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) கடந்த 2023-ம் ஆண்டு இரண்டாம் நிலை (Grade-II) காவலர்கள், தீயணைப்புத்துறை மற்றும் சிறைத்துறை காவலர் பதவிக்கு நடைபெற்ற எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற கூடுதல் தேர்வாளர்களுக்கு திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ள உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்ள 998 தேர்வாளர்களுக்கு அழைப்பு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வானது (20.08.2024)ந் தேதி வரை 4 நாட்களுக்கு நடைபெற உள்ளது. மேற்கன்ட உடற்தகுதி தேர்வானது துணை குழுதலைவர் (Sub-committee Chairman) திருச்சி மாநகர துணை ஆணையர் (வடக்கு) S.செல்வகுமார் தலைமையில், காவல்துறை அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் என சுமார் 255 பேர்கள் பணியமர்த்தப்பட்டு, சிறப்பு மேற்பார்வை அதிகாரியான (Super Check Officer) திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்பார்வையில் நடைபெற உள்ளது.

இத்தேர்வில் நாளை (20.08.2024) கலந்துக்கொள்ள அழைப்பு கடிதம் கொடுக்கப்பட்ட தேர்வாளர்களுக்கு 1.சான்றிதழ்கள் சரிபார்ப்பு (Certificate verification) 2.உயரம் மற்றும் மார்ப்பளவு சரிபார்த்தல் (Physical measurement Test) 3.சகிப்புதன்மை சோதனை (Endurance Test) போன்ற போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் தகுதி பெறும் நபர்களுக்கு அடுத்த கட்ட நிகழ்வுகள் நடைபெறும் திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *