Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

கடல் போல் காட்சியளித்த திருச்சி விமான நிலையம்

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று கோடை மழை வெளுத்து வாங்கியது. சுமார் 3 மணி நேரத்திற்கு பெய்த மழையால் பெரும்பாலான மாவட்டங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் குடியிருப்பு பகுதிகள் சாலைகளில் மழை நீர் ஆறு போல ஓடியது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் விமான நிலையம் பகுதியில் 129.4 மி.மீ மழை பெய்தது. திருச்சி மாவட்டத்திலேயே நேற்று அதிகமாக விமான நிலையப் பகுதியில் மட்டுமே மழை பெய்துள்ளது. இதனால் விமான நிலையம் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டிருந்தது. குறிப்பாக விமான நிலைய ஓடுதளம் மற்றும் தீயணைப்பு நிலையம் பகுதி முழுவதும் மழை நீரால் சூழப்பட்டிருந்தது. திருச்சி விமான நிலையத்தின் உள்ளே தேங்கிய மழை நீர் கடல் போல் காட்சியளித்தது.

குறிப்பாக இந்த மழையால் விமானங்கள் போக்குவரத்து பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. பயணிகள் செல்வதற்கும் எந்த சிரமமும் ஏற்படாத வண்ணம் விமான நிலைய நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் இனிமேல் மழைநீர் தேங்காமல் இருக்க தற்பொழுது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *