Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கிடந்த மர்ம பையால் பரபரப்பு

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை பேருந்துகள் நிற்கும் பகுதியில் 3 பைகள் கிடந்தது. நீண்ட நேரமாக அந்தப் பையன் யாரும் எடுக்காமல் அதே இடத்தில் இருந்ததால் ரோந்து பணியில் இருந்த காவலர்கள் இதை கண்டனர். உடனே கண்டோன்மென்ட் காவல்துறையினர் கைப்பற்றினர்.

பின்னர் அந்த பைகளை யாரும் தவற விட்டு சென்றார்களா? இல்லை வேண்டுமென்றே பேருந்து நிலையத்தில் போட்டு விட்டு சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார் வரவழைக்கப்பட்ட அந்த பை சோதனையிடப்பட்டது. வெளிநாட்டிலிருந்து திருச்சி வந்த பயணி ஒருவர் பேருந்து நிலையத்தில் இந்த பைகளை தவறவிட்டிருப்பது தெரியவந்தது.

மேலும் அந்தப் பையில் புதிய துணிகள், பாதாம், முந்திரி உள்ளிட்ட பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. மேலும் அந்தப் பையில் பெரியசாமி ஆறுமுகம் என்ற பெயர் இருந்துள்ளது அவர் யார் எங்கிருந்து வந்தார் எதற்காக பையை விட்டுச் சென்றார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *