Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சிலம்பம் சுழற்றிய திருச்சி மாவட்ட ஆட்சியர்

திருச்சிராப்பள்ளி எடமலைப்பட்டி புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம்  அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர்  நேரு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டனர். முன்னதாக விழா நடைபெறும் பகுதிக்கு வந்த ஆட்சியர் பிரதீப் குமார் அங்கு சிலம்பம் சுழற்றும் பயிற்றுவிப்பவரிடமும் பேசிக் கொண்டிருந்தார்.

அவருடன் பேசிக்கொண்டே கையில் சிலம்பத்தை வாங்கி சுழற்றி மகிழ்ந்தார். சிறிது நேரம் சிலம்ப கலை பற்றி தகவல்களை பேசிக்கொண்டே ஆட்சியர் லாவகமாக சிலம்பத்தை சுழற்றினார். பின்னர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு வந்தவுடன் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு புறப்பட்டு சென்றார்.

கடந்த மாதம் திருச்சியில் நடைபெற்ற புத்தக திருவிழாவின் இறுதி நாளன்று உற்சாக மிகுதியில் மேடையில் பேசிவிட்டு விசில் அடித்து அனைவரையும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *