Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ரூ.35 லட்சம் மோசடி செய்த திருச்சி அரசுப்பள்ளி ஆசிரியர் கைது

வேலூர் காட்பாடி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். வேலூரில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். திருச்சி மாவட்டம் உறையூர் லோட்டஸ் நகரை சேர்ந்த நீலகண்டன் (45) என்பவர் திருச்சி தில்லைநகரில் உள்ள அரசு நிதியுதவி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். இருவரும் ஆசிரியர் சங்கத்தில் நிர்வாகிகளாக இருந்ததால் அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் நண்பர்களாகினர்.

இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு நீலகண்டன், தான் தொழில் தொடங்க உள்ளதாகவும், அதற்கு அதிகளவு பணம் தேவைப்படுகிறது. உன்னிடம் இருக்கும் பணத்தை கொடுத்தால் ஓரிரு ஆண்டுகளில் அதனை இருமடங்காக திருப்பி தருகிறேன் என்று சரவணனிடம் கூறி உள்ளார். அதனை நம்பிய சரவணன் ரூ.35 லட்சத்தை பல்வேறு தவணைகளாக நீலகண்டனிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் தெரிவித்தப்படி இருமடங்காக பணத்தை திரும்ப கொடுக்கவில்லை.

அதனால் சரவணன் தனது பணத்தை கொடுக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு நீலகண்டன் சில மாதங்களில் தருகிறேன் என்று மோசடி செய்து வந்துள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் இதுகுறித்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதிவாணனிடம் புகார் அளித்தார். அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கும் படி மாவட்ட குற்றப்பிரிவுக்கு, போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாபுரவிச்சந்திரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்.

அதில் சரவணன் ரூ.35 லட்சத்தை நீலகண்டனுக்கு கொடுத்ததும், அதனை அவர் திரும்ப கொடுக்காமல் மோசடி செய்ததும் உறுதியானது. இதையடுத்து வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று திருச்சிக்கு சென்று ஆசிரியர் நீலகண்டனை கைது செய்தனர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *