Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி விஷன் செய்தி எதிரொலி – அங்கன்வாடி மையத்திற்கு மாற்று இடம்!!

ஆபத்தான சூழலில் இருக்கும் அங்கன்வாடி கட்டிடம் – நடவடிக்கை எடுக்கப்படுமா?? என்ற தலைப்பில் திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் தாத்தயங்கார்பேட்டை ஒன்றியம் மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் இருக்கும் அங்கன்வாடி மையத்தில் 30 குழந்தைகள் வரை தினமும் பயில்கின்றனர்.

நெடு நாளாகவே இந்த அங்கன்வாடி மையத்தின் கட்டிடம் பாழைடைந்து உள்ள நிலையில் தற்போது சீலிங் பகுதியில் இருந்து சிமெண்ட் வெளியேறி வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழ கூடிய ஆபத்து உள்ள இந்த கட்டிடம் குறித்து அங்கன்வாடி பணியாளர்களிடம் நடவடிக்கை எடுக்க கூறும்போது அவர்களிடம் இருந்து சரியான பதில் வருவதில்லை.

பெரும்பாலும் எங்களுக்கு இந்த கட்டிடத்தை மாற்றி செல்வதற்கு ஏற்ற சரியான கட்டிடம் அமையவில்லை என்பதே பதிலாக உள்ளது. இந்நிலையில் அரசு நிர்வாகம் தலையிட்டு கட்டிடத்தை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் 30 குழந்தைகளின் உயிர்களை பாதுகாக்க வேண்டும் எனவும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளன்னர் என்று செய்தி வெளியிட்டு இருந்தோம்..

அதன் அடிப்படையில் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையத்திற்கு மாற்று இடத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *